இலங்கை

திருகோணமலையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாடில் இராணுவ வீரர் ஒருவர் கைது

திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்யாணபுர பகுதியில் கஞ்சா போதை பொருளை தம்மசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல-கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த தினபாலகே விஜேதிலக (48வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்த இராணுவ வீரர் வீட்டுக்கு வந்தபோது வீட்டை சோதனையிட்ட வேளை அவரிடமிருந்து 10g கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content