அவசரகால நிலையை அறிவித்த ஹைட்டிய அரசாங்கம்

ஹைட்டிய அரசாங்கம் குற்றவியல் கும்பல்களின் வன்முறை அதிகரித்து வருவதால் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
மூன்று மாத காலத்திற்கு அவசரகால நிலை அமலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆயுதமேந்திய கும்பல்களின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலவும் பாதுகாப்பின்மையை எதிர்த்துப் போராட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசாங்கம் மேலும் கூறுகிறது.
தற்போது நெருக்கடியை எதிர்கொள்ளும் விவசாயம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளைக் காண இது பயன்படுத்தப்படும் என்றும் ஹைட்டிய அரசாங்கம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
(Visited 1 times, 1 visits today)