உலகம் செய்தி

பெருவில் பியூமாபே கோவில் வளாகத்தில் பெருந்தொகை மனித எலும்புக்கூடுகள்

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமைந்த பியூமாபே கோவில் வளாகத்தில், 14 மனித எலும்புக்கூடுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த எலும்புக்கூடுகள் கிமு 1000ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனக் கணிக்கப்படுகிறது. ஆய்வுகளின்போது, அவை தலைகீழாக புதைக்கப்பட்டிருந்தது. சில எலும்புக்கூடுகளில் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த எலும்புக்கூடங்கள் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டிருப்பது, சாலினார் (Salinar) கலாசாரம் சார்ந்த பழைய வழிபாடுகள், சடங்குகள், மற்றும் பலி கொடுத்தல் போன்ற பழங்கால நம்பிக்கைகள் குறித்து முக்கியமான தகவல்களை வழங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சாலினார் நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி