ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

எலிசபெத் மகாராணியை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் குறித்து வெளிப்படுத்திய எஃப்பிஐ!

எலிசபெத் மகாராணியை கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித் திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது.

1983ம் ஆண்டு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை பிரிட்டிஸ் மகாராணி உயிராபத்துக்களை எதிர்கொண்டார் என எவ்பிஐ வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியாரின் அமெரிக்க விஜயத்தின்போது, அவர் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

Pic: AP

image credits sky news 

அதாவது, வட அயர்லாந்தில் உள்ள மதுபான சாலைக்கு அடிக்கடி சென்ற நபர் ஒருவர் மூலம் தான் மகாராணியார் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தாக பொலிஸ் அதிகாரி எவ்பிஐயிடம் கூறியுள்ளார்.

வடஅயர்லாந்தில் ரப்பர் புல்லட்டினால் கொல்லப்பட்ட தனது மகளிற்காக பழிவாங்கப்போவதாக அந்த நபர் தெரிவித்தார் என அந்த அதிகாரி எவ்பிஐஎஜன்ட்களிற்கு தெரிவித்துள்ளார்.

Pic: AP

image credits sky news 

எலிசபெத் மகாராணி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பெப்ரவரி நான்காம் திகதி ( 1983)இந்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.

எலிசபெத் மகாராணிக்கு உயிர் ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட எவ்பிஐ படகு நெருங்க கோல்டன் கேட் பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு திட்டமிட்டது என எவ்பிஐ ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

 

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!