இந்தியா

​மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் விடுவிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்த வழக்கில் 12 பேர் விடுவிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2006ஆம் ஆண்டில் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் மாண்டனர்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் எனத் தீர்ப்பு அளித்தது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

ஆனால், குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் 12 பேரை​யும் விடு​தலை செய்யுமாறு திங்கட்கிழமை உத்​தர​விட்​டது. இதில் அனை​வரும் விடு​தலையாகினர்.

இந்நிலையில், மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து மகா​ராஷ்டிர அரசாங்கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மனுவை நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், என்​. கோடீஸ்​வர் சிங் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை (ஜூலை 24) விசாரித்தது.அப்​போது, குற்​ற​வாளி​களை விடு​வித்து மும்பை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்​காலத் தடை விதித்​தது.

மேலும் இந்த மனு தொடர்​பாக பதில் அளிக்​கு​மாறு அனைத்து குற்​ற​வாளி​களுக்​கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உத்​த​ரவிடப்பட்டது.அதே சமயத்தில் விடுதலை செய்​யப்​பட்ட குற்​ற​வாளி​களை மீண்​டும் சிறை​யில் அடைக்க வேண்​டும் என எந்​த உத்​தர​வும்​ பிறப்​பிக்​கப்பட​வில்​லை.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content