செய்தி விளையாட்டு

ENGvsIND – மூன்றாம் நாள் முடிவில் 186 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஒல்லி போப் அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 3 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்களைக் குவித்துள்ளது.

இதன்மூலம் 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்தியா சார்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், பும்ரா, சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content