வட அமெரிக்கா

அமெரிக்க அரச அலுவலகத்தில் வெடிப்பு – மூன்று அரசு அதிகாரிகள் பலி

அமெரிக்கா – லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் பிஸ்கெய்ன்ஸ் பயிற்சி மையத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வெடிப்பில் மூன்று அரசு அதிகாரிகள் இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள், குண்டுவெடிப்பு, தீ வைப்பு மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான நிபுணர்கள் என தெரிவிக்கப்படுகின்றது..

மூன்று அதிகாரிகளும் 19 முதல் 33 ஆண்டுகள் வரை இந்தத் துறையில் பணியாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்பு காரணமாக இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வெடிகுண்டு அகற்றும் குழு ஒன்று துறைக்கு வெடிபொருட்களை கொண்டு சென்றபோது இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

வெடிபொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லத் தவறியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெடிபொருட்களை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்றதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக மாநில பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content