இலங்கை விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை!

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
AASL வெளியிட்ட அறிக்கையில், எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திற்கும் 5 கிமீ சுற்றளவில் 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் அல்லது எந்தவொரு வான்வழிப் பொருளையும் பறக்கவிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் பட்டம் பறக்கவிடுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த எச்சரிக்கை விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து, விமானங்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து காரணமாக, தொடர்ச்சியான விபத்துகள் விமானப் பயணிகளுக்குப் பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.