சீனாவில் பூனைக்காக உரிமையாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்!

சீனாவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகு தனது பூனையைப் பராமரிக்க விரும்புவோருக்கு தனது முழு சொத்தையும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
லாங் என்ற முதியவர், குவாங்டாங் மாகாணத்தில் தனியாக வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இல்லாத லாங், தனது துணைக்கு 4 தெரு பூனைகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.
இந்த 4 பூனைகளில் சியான்பா என்ற பூனை மட்டுமே இன்னும் அவருடன் உள்ளது. தான் உயிரிழந்த பிறகு இந்த பூனையை யார் பார்த்துக்கொள்வது என்று கவலைப்பட்ட லாங், சியான்பாவை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள கூடிய நபரை தேடி வருகிறார்.
இந்நிலையில், அவரது பூனையை பத்திரமாக பார்த்து கொள்பவருக்கு தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்புகள் உட்பட தனது முழு எஸ்டேட்டையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.