ஆசியா

உலகில் முதன்முறையாக ஜப்பான் எடுக்கும் முயற்சி

உலகில் முதன்முறையாக ஆழ்கடலில் இருந்து அரிய கனிமங்களை எடுக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில், அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் அரிய கனிமங்களின் விநியோகம் தடையின்றித் தொடர ஜப்பான் உறுதியளித்தது.

மின் வாகனங்கள், காற்றாலைகள், ஏவுகணைகள் முதலியவற்றைத் தயாரிப்பதில் அரிய கனிமங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. புத்தாக்கத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான அரிய கனிமங்களை வழங்குவதில் சீனாவின் செல்வாக்குப் பெருகுவதாக அக்கறை எழுந்துள்ளது.

எனவே, கடலிலிருந்து அரிய கனிமங்களைச் சலித்தெடுக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. மூன்று வாரத்தில் 35 டன் கடலடி மண்ணெடுக்க அது திட்டமிடுகிறது.

ஒரு டன் கடலடி மண்ணிலிருந்து 2 கிலோ அரிய கனிமங்கள் கிடைக்கலாம். அவை நவீன மின்னியல் சாதனங்களுக்கு இன்றியமையாதவையாகும்.

அதற்கமைய, உலகில் முதன்முறையாக 5,500 மீட்டர் ஆழத்திலிருந்து கடலடி மண்ணெடுக்கும் சோதனை நடத்தப்படுகிறது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content