ஐரோப்பாவை உலுக்கிய வெப்பம் – ஸ்பெயினில் நால்வர் பலி

ஐரோப்பாவை உலுக்கிய வெப்பம் இதுவரை காணாத அளவை எட்டியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
பல நாடுகளில் உச்ச விழிப்பு நிலை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஸ்பெயினில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு ஜூன் மாதம் வரலாற்றில் மிக வெப்பமான மாதமாகப் பதிவானது.
கேட்டலோனியா பகுதியில் மூண்ட காட்டுத்தீ பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பிரான்ஸின் பல வட்டாரங்களிலும் கடும்வெப்பம். கவனமாய் இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால் மின்சாரக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டது.
வெப்பத்தால் 300 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பிரான்சின் எரிசக்தி அமைச்சர் கூறினார்.
ஜெர்மனியில் நேர்மாறாக ஆலங்கட்டி மழை பொழிகிறது. அதற்குப் பருவநிலை மாற்றமே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.