இலங்கை

இலங்கை – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான கொன்சியூலர் விவகாரங்கள் தொடர்பான குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இருதரப்புப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துகளுக்கு அமைவாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றிருந்தது.

இக்கூட்டத்தில் ஆட்கடத்தல், சட்டவிரோத குடியேற்றம், தமது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய நாட்டுப்பிரஜையை நாடுகடத்துதல் மற்றும் இழப்பீடு வழங்குதல் என்பன உள்ளடங்கலாக கொன்சியூலர் சேவையுடன் தொடர்புடைய, இருநாடுகளினதும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்