இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகடிவதை சம்பவங்கள் – 22 மாணவர்கள் இடைநீக்கம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 22 மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், புதிய மாணவர்கள் குழு ஒன்று கொடூரமான முறையில் பகடிவதைக்கு உட்படுததப்படுவடைத காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இடைநீக்கங்கள் அமல்படுத்தப்பட்டன.
ஆரம்ப உள் விசாரணையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மாணவர்களை இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.
இடைநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் பொறியியல் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு கூடுதலாக, இந்த சம்பவம் குறித்து காவல்துறை முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பல்கலைக்கழகங்களுக்குள் ராகிங் உட்பட அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவே ஒரு சிறப்பு பணிக்குழுவை நியமித்துள்ளார்.