செய்தி

இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் தளபதி தொடர்பில் வெளிவந்த தகவல்

ஈரான் ராணுவத் தளபதி சயீத் இஜாதியை வான் தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட தளபதி 2023-இல், இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை திட்டமிடுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கோம் நகரில், அவர் பதுங்கியிருந்த வீட்டை நீண்ட தேடலுக்குப் பின் உளவுத்துறையினர் கண்டுபிடித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கும், ஈரான் ஆட்சியாளர்களுக்கும் இடையே பாலம் போல் சயீத் இஜாதி செயல்பட்டதாகவும், ஹமாஸுக்கு நிதி உதவி கிடைக்க வழிவகை செய்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

 

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!