இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்தைப் பயன்படுத்திச் சுயவிளம்பரம் தேட வேண்டாம் என கோரிக்கை

ஏர் இந்தியா விமான விபத்தைப் பயன்படுத்திச் சுயவிளம்பரம் தேட வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்தில் 3 பிள்ளைகளுடன் பலியான பிரத்தீக் ஜோஷி – கோமி வியாஸ் தம்பதியின் உறவினர் குல்டீப் என்பவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குடும்பத்தின் படத்தை AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு மாற்றியமைத்தும் போலியான காணொளிகளைப் பகிர்ந்தும் சிலர் சுயவிளம்பரம் தேட முயல்வது மிகவும் வருத்தமளிப்பதாக குல்டீப் கூறினார்.

சமூக ஊடகத்தில் தங்களுக்கு likes உயர வேண்டும், followers எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சிலர் இத்தகைய செயல்களைச் செய்கின்றனர் என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்த கோமியின் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதும் வருத்தமளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படிச் செய்வதால் தங்களுக்கு மனஉளைச்சல் இன்னும் கூடுவதாக குல்டீப் குறிப்ிபட்டுள்ளார்.

இத்தகைய செயல்களை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே