இலங்கையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தேவையான பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை பொலிஸ் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மோட்டார் போக்குவரத்து ஆணையருக்கு இது தொடர்பான முழுமையான பொறுப்பு இருப்பதால், திணைக்களம் அவசர முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் மோட்டார் போக்குவரத்து திணைக்களமிடமிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட சாரதி அனுமதி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றில், 4 மில்லியனுக்கும் அதிகமான 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்ற சாரதி அனுமதி பத்திரங்களை கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவற்றில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவை கனரக வாகன சாரதி அனுமதி பத்திரங்களாகும்.
அதற்கமைய, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டு, புதிய முறையின் கீழ் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.