ஆசியா

வடகிழக்கு சீனாவில் வணிக தகராறில் இரண்டு ஜப்பானிய ஆண்கள் படுகொலை

சீனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள டாலியான் நகரில் ஜப்பானியர் இருவர் கொலை செய்யப்பட்டதாக பெய்ஜிங்கில் உள்ள ஜப்பானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.அதன் தொடர்பில், சந்தேகத்துக்குரிய சீன நபர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அது கூறியது.

கொலை செய்யப்பட்ட இருவரும் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மே 25ஆம் திகதி, ஷென்யாங்கில் உள்ள ஜப்பானியத் துணைத் தூதரகத்திற்குச் சீன அதிகாரிகள் தகவல் அளித்தனர். வர்த்தகம் தொடர்பான சர்ச்சை கொலைக்கான காரணம் என்று கூறப்பட்டது.

முன்னதாக, சென்ற ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் சீனாவின் தென்பகுதி நகரான ஷென்சென்னில் 10 வயது நிரம்பிய ஜப்பானிய மாணவன் சீன நபரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

2024 ஜூன் மாதத்தில் சுசோவில் உள்ள ஜப்பானியப் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் சீனப் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். சீன நபர் நடத்திய அந்தத் தாக்குதலில் ஜப்பானியத் தாயாரும் அவரது குழந்தையும் காயமடைந்தனர்.

குற்றம் செய்த நபர் இருவருக்கும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தனித்தனியே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content