ஆசியா

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட பூனை : இணையத்தில் வைரலாகும் வினோத சம்பவம்!

தாய்லாந்தில் போலீசாரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் பூனை ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த சம்பவம் தொடர்பில் விரிவாக பார்க்கலாம்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் புகார் அளித்தனர்.

அதன்பேரில் நுப் டாங் என்ற அந்த பூனையை பொலிசார் கண்டுபிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பூனையுடன்  பொலிசார் கொஞ்சி விளையாடினர்.

அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களை தாக்கியதாக கூறி அந்த பூனை மீது பொலிசார்  வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே பூனையின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையம் சென்றனர். அவர்களிடம் பூனையை ஒப்படைக்கும் முன்னர் போலியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிந்து பூனையை கைது செய்வதுபோல் நடித்தனர்.

குற்றவாளியின் இடத்தில் பூனையும், அதற்கு ஜாமின் பெறுவது போல் உரிமையாளர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதனை புகைப்படம் எடுத்த போலீசார் சமூகவலைதளத்தில் பதிவிட அது வைரலாகி லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்றுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்