அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும்!! ஆனால் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் : ஈரான்!

ஈரான் ஜனாதிபதி தனது நாடு அதன் வேகமாக முன்னேறி வரும் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும், ஆனால் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் காரணமாக அதன் உரிமைகளிலிருந்து விலகாது என்று கூறியுள்ளார்.
நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பேச்சுவார்த்தை நடத்துவோம், ஆனால் எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அஞ்சவில்லை” என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிய கடற்படை அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையின் போது கூறினார்.
நாங்கள் பின்வாங்க மாட்டோம், அனைத்து துறைகளிலும் கௌரவமான இராணுவ, அறிவியல், அணுசக்தியை எளிதில் இழக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் சாத்தியமான ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முயற்சிக்கின்றனர்.
ஆனால் ஒரு பெரிய சிக்கல் ஈரானின் யுரேனிய செறிவூட்டல் ஆகும், அதைச் செய்ய தெஹ்ரான் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது, மேலும் டிரம்ப் நிர்வாகம் அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.
ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானின் திட்டத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்கத்கது.