இலங்கை – உள்ளுராட்சி தேர்தல் : நண்பகல் 12 மணிவரை பதிவான வாக்களிப்பு நிலவரம்!

இலங்கையில் இன்று (06.05) காலை 07.00 மணிமுதல் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் நண்பகல் 12.00 மணிக்கு பதிவான வாக்குகளின் விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 30 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி,
மாத்தறை – 42%
மன்னார் – 40%
திருகோணமலை – 36%
பதுள்ளை – 36%
காலி – 35%
யாழ்ப்பாணம் 35%
பொலன்னறுவை – 34%
கேகாலை – 33%
கண்டி 33%
அம்பாறை – 31%
இரத்தினபுர- 30%
புத்தளம் – 30%
அனுராதபுரம் 30%
கொழும்பு – 28%
(Visited 1 times, 1 visits today)