இன்றைய முக்கிய செய்திகள் செய்தி தென் அமெரிக்கா

சிலி மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சிலியின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிலி அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் சிலி மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் உள்ள கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவிற்கும் இடையேயான டிரேக் பாதையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் மையப்பகுதி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரத்திலிருந்து 219 கிமீ (136 மைல்) தொலைவில் இருந்தது – இது உலகின் தெற்கே உள்ள நகரமாகும்.

சிலியின் தொலைதூர மாகல்லன்ஸ் பகுதி மற்றும் சிலி அண்டார்டிக் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அர்ஜென்டினாவின் டியர்ரோ டெல் ஃபியூகோ பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!