பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்த பாகிஸ்தான்

இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் அனைத்து விமானங்களுக்கும் தனது வான்வெளியை மூடிய சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிக்கான தனது சொந்த விமானங்களை ரத்து செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்கு இஸ்லாமாபாத் அஞ்சும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் (PIA) பாகிஸ்தான் ., கில்கிட் மற்றும் ஸ்கார்டுவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
ஸ்கார்டுவுக்குச் செல்லும் நான்கு விமானங்கள், கராச்சி மற்றும் லாகூரில் இருந்து தலா ஒன்று மற்றும் இஸ்லாமாபாத்தில் இருந்து இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் இருந்து கில்கிட்டுக்குச் செல்லும் மேலும் நான்கு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் உருது நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் “முன்னெச்சரிக்கை” என்றும் “அதன் வான்வெளி” பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் செய்தித்தாளிடம் தெரிவித்தனர்.