ஐரோப்பா

அமைதி ஒப்பந்தம் முடிவடையும் – ரஷ்யாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

கியேவில் உள்ள பல மாவட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஒரே இரவில் ரஷ்ய தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க தூண்டியது.

“KYIV மீதான ரஷ்ய தாக்குதல்களில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவசியமில்லை, மிகவும் மோசமான நேரம்” என்று டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர், நிறுத்து! வாரத்திற்கு 5000 வீரர்கள் இறக்கின்றனர். அமைதி ஒப்பந்தம் முடிவடையும்!” என அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்ய தாக்குதல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனை ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு சாத்தியமான அமைதித் திட்டத்தை ஏற்குமாறு அழுத்தம் கொடுத்ததாக உக்ரைனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்ததார்.

இந்நிலையில் ட்ரம்பின் தற்போதைய கருத்து  வந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்