செய்தி

இன்று தொடங்குகிறது ஐபிஎல் -, முதல் போட்டியில் KKR-RCB மோதல்

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தங்கள் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த முதல் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடந்த 34 போட்டிகளில் (IPL 2024 வரை), கொல்கத்தா அணி 20 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வென்றுள்ளன.

ஈடன் கார்டன்ஸில் மட்டும் கொல்கத்தா அணி, 7-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 போட்டிகளில் கொல்கத்தா 6 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய ஆட்டத்தின் போது, மழை பாதிப்பு இல்லையெனில், அதிக ஸ்கோர் கொண்ட ஒரு அற்புதமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். இந்த ஐபிஎல் திருவிழாவின் தொடக்கமாக, இன்றைய முதல் போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஐபிஎல் தொடக்க போட்டியானது நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும். அதேபோல, அந்த மைதானத்தில் மட்டுமே ஐபிஎல் தொடக்க விழாவும் நடைபெறும். இன்றைய போட்டிக்கு முன்னதாக தொடக்க விழா மாலை 5:30 முதல் 7:00 மணி வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து 7:30 மணிக்கு முதல் போட்டி தொடங்கும். இது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா ஆப் மூலமாகவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

பாலிவுட் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த முன்னணி பாடகர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை, பாடகி ஸ்ரேயா கோஷல், பாலிவுட் நடிகை திஷா பதானி ஆகியோர் பெயர்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டுகளில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர்-எஹ்சான்-லாய், கத்ரினா கைஃப் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு, தீபிகா படுகோன், ஷாருக்கான், அல்லது ரன்வீர் சிங் போன்றவர்கள் தங்கள் நடனத்தால் ரசிகர்களை கவரலாம். மேலும், ஷ்ரத்தா கபூர், வருண் தவான், அரிஜித் சிங், கரண் அவுஜ்லா ஆகியோர் இன்னும் உத்தேச பட்டியலில் உள்ளனர். இன்றைய முதல் போட்டியை போல், அனைத்து இடங்களிலும் தனித்தனியாக விழா நடைபெறுமா அல்லது திரையிடல் மட்டும் செய்யப்படுமா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி