இலங்கை

போப் பிரான்சிஸிற்கு குவியும் கடிதங்கள்

போப் பிரான்சிஸிற்கு குணமடையவேண்டி மக்கள் அன்பு கடிதங்கள் குவிந்து வருவதாகவும், அதிகளவிலான கடிதங்கள் பிள்ளைகளிடமிருந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போப் பிரான்சிஸ் சென்ற மாதத்திலிருந்து மருத்துவமனையில் இருக்கிறார். வெவ்வேறு அளவுகள், நிறங்களில் கடிதங்கள் அனுப்பப்படுகின்றது.

மருத்துவமனையில் இருக்கும் போப்பிற்குப் பிள்ளைகள் கடிதங்களையும் ஓவியங்களையும் அனுப்புகின்றனர். ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வருவதாக அவற்றைக் கையாளும் அஞ்சல் நிலையம் கூறியது.

வாரத்திற்குச் சராசரியாக 150 அன்பு மடல்களாகும். ஒவ்வொரு நாளும் ஜெமெலி மருத்துவமனை வேன் ஒன்றை அனுப்புகிறது.

அது போப்பிற்கும் வத்திகனிற்கும் எழுதப்பட்ட கடிதங்களைப் பெற்றுவருகிறது. போப் இரவில் சுவாசக்கருவி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக வத்திகன் அண்மையில் தெரிவித்தது.

அவருடைய உடல்நலம் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்று அவருடைய மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!