செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் க்ரீன் அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்களை குறிவைக்கும் ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் க்ரீன் அட்டை வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமை திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விமான நிலையங்களில், 2ஆம் கட்ட பரிசோதனைக்கு உட்டுத்தி, க்ரீன் அட்டை வைத்திருக்கும் முதியவர்களை குறி வைத்து அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர். தாங்களாக முன்வந்து க்ரீன் அட்டைகளை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

சிலர், அவர்களின் கெடுபிடிகளுக்குப் பயந்து தங்களது க்ரீன் அட்டைகளை ஒப்படைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், க்ரீன் அட்டை வைத்திருக்கும் மூத்தக் குடிமக்களுக்கு சட்டத் துறையிடமிருந்து வரும் அறிவுரை என்னவென்றால் யாரும் க்ரீன் அட்டையை ஒப்படைக்கத் தேவையில்லை. க்ரீன் அட்டை வைத்திருப்பவர்கள், குடியுரிமைத் துறை நீதிபதியின் ஆலோசனையை பெறலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

க்ரீன் அட்டைகளை ஒப்படைக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட மூத்தக் குடிமக்களுக்காக பணியாற்றும் குடியுரிமைத் துறை வழக்குரைஞர்கள் கூறுகையில், அமெரிக்காவில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் பெற்றோர், அமெரிக்காவின் குளிர்காலத்தில் மட்டும் அதாவது 180 நாள்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவது வழக்கம்.

குளிர்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் போது நிச்சயம் அவர்களது க்ரீடு கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும். இதனைக் காரணம் காட்டி நிராகரிக்க முடியாது. ஏனெனில், அமெரிக்க சட்டம், ஒருவர் 365 நாள்ளுக்கும் மேலாக அமெரிக்காவிலிருந்து வெளியே சென்று எங்காவது தங்கியிருந்தால்தான் க்ரீன் கார்டு உரிமத்தை ரத்து செய்வதற்காக பரிசீலிக்க முடியும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி