ஆசியா

சிங்கப்பூரில் நடைபெற்ற பர்கர் சவால் – உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன்

சிங்கப்பூரில் நடைபெற்ற 30 நிமிடங்களில் 7 பவுண்டு பர்கரைச் சாப்பிடும் சவாலினால் இளைஞனுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சவாலில் பங்கேற்ற பெயர் தெரியாத இளைஞன் அதனால் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பர்கரைச் சாப்பிட்டதால் இளைஞனின் வயிறு அளவிற்கு மீறி விரிந்தது. அதனால் ஏற்பட்ட அடைப்பால் அவரால் 5 நாட்களுக்கு மலம் கழிக்க முடியவில்லை.

மருத்துவமனைக்குச் சென்ற பிறகே அது சரியானதாக தெரியவந்துள்ளது. CT scan பரிசோதனை மேற்கொண்டபோது செரிககாத சாப்பாடு இளைஞனின் வயிற்றில் நிறைய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அது அவருடைய உடலுறுப்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் நபரின் மூக்கு வழியாகக் குழாயைவிட்டு செரிக்காத உணவை வெளியேற்றினர்.

தற்போது அவருடைய உடல்நலம் தேறிவருவதாகக் கூறப்பட்டது.

(Visited 19 times, 19 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்