ராஜஸ்தானில் விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம் – 25 வயது இளைஞன் மரணம்
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மூன்று ஆண்கள் தனது உடலில் வண்ணம் பூசுவதைத் தடுக்க முயன்றதற்காக 25 வயது இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரால்வாஸ் கிராமத்தில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகியோர் உள்ளூர் நூலகத்திற்குச் சென்று அங்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த ஹன்ஸ்ராஜின் மீது வண்ணம் பூச முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹன்ஸ்ராஜ் வண்ணம் பூச மறுத்ததால், மூவரும் அவரை உதைத்து பெல்ட்களால் தாக்கினர், பின்னர் அவர்களில் ஒருவர் கழுத்தை நெரித்ததால் உயிரிழந்ததாக காவல் கண்காணிப்பாளர் தினேஷ் அகர்வால் தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)





