ஜெர்மனியில் பொது மக்கள் மீது மோதிய கார் – நீடிக்கும் மர்மம்

ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மென்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் வீதியில் இந்த கார் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கார் தாக்குதலில் 2 போ் உயிரிழந்ததுடன், சுமாா் 5 போ் காயமடைந்துள்ளனர்.
இது தொடா்பாக ஜெர்மனியைச் சோ்ந்த 50 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகும் தாக்குதலுக்கான காரணத்தை அவர் கூறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் தாக்குதலின் நோக்கம் குறித்து மர்மம் நீடித்துவருகிறது.
(Visited 8 times, 1 visits today)