இலங்கை: பாடசாலை மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் – 7 பேர் கைது!

களுத்துறை – நாகஸ்ஹந்திய பகுதியில் பாடசாலை மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கும் வகையில் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் உள்ளிட்ட 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று பிற்பகல் கற்றல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், குறித்த பாடசாலையின் தரம் 10 இல் கல்வி கற்கும் இரு மாணவக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)