உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்க லண்டனில் ஒன்றுக்கூடும் உலக தலைவர்கள்!

இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த அசாதாரண காட்சிகளுக்குப் பிறகு, உக்ரைன் போர் குறித்த ஒரு முக்கியமான உச்சிமாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் இன்று மத்திய லண்டனுக்கு வர உள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை வரவேற்கவுள்ளார்.
பின்னர் தலைவர்களுடன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரெஞ்சு ஜனாதிபதி எம்மானல் மக்ரோன், ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் இணைவார்கள்.
டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ஸ்பெயின், பின்லாந்து, சுவீடன், செக்கியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தலைவர்களும், துருக்கியின் வெளியுறவு அமைச்சரும் கலந்து கொள்வார்கள்.
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.