பிரான்ஸில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு!
 
																																		பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் நபர் ஒருவர் பொலிஸாரை மிரட்டிய நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நகர மையத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள டக்னியில் உள்ள அதிகாரிகள் மீது சந்தேக நபர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளில் ஒருவர் மின்சார ஸ்டன் துப்பாக்கியைப் பயன்படுத்தினார், ஆனால் அந்த நபரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போதுதான் மற்றொரு அதிகாரி தனது சேவை துப்பாக்கியால் சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
சீன்-செயிண்ட்-டெனிஸ் பிராந்திய பாதுகாப்பு சேவை மற்றும் பிரெஞ்சு தேசிய போலீஸ் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 32 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
