உக்ரைனைத் தாக்க மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்திய ரஷ்யா – போலந்தின் எல்லையில் பதற்றம்!

விளாடிமிர் புடின் உக்ரைனைத் தாக்க மூலோபாய குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தியதை அடுத்து, போலந்தில் நேட்டோ தனது போர் விமானங்களை பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடங்கிய பிறகு மேற்கொண்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
புடினின் விமானப்படைகள் Tu-95MS அணுசக்தி திறன் கொண்ட மூலோபாய குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.
இதனால் குடியிருப்பாளர்கள் மெட்ரோ நிலத்தடி தங்குமிடங்களுக்கு விரைந்ததால் கீவில் பீதி ஏற்பட்டது. உக்ரைன் மீதான தாக்குதல்கள் காலை வரை தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஷ்ய கூட்டமைப்பின் நீண்ட தூர விமானப் போக்குவரத்து செயல்பாடு காரணமாக, குறிப்பாக, உக்ரைனின் மேற்கில் அமைந்துள்ள இலக்குகளைத் தாக்கும், போலந்தின் வான்வெளியில் இராணுவ விமானப் போக்குவரத்து செயல்படத் தொடங்கியுள்ளது.” வார்சாவின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.