Caffeine குறித்து எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய ஒன்றியம்

புதிய இரசாயன பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் (EU) caffeine குறித்து ஒரு ஆச்சரியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் அது “மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்” என்று புதிய இரசாயன பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பெயரிடப்பட்டுள்ளது.
புதிய ஒழுங்குமுறையில் 27 நாடுகளின் கூட்டமைப்பு, caffeine பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது,
caffeineயின் மையக் கூறு இதயம், நீரேற்றம் மற்றும் உடல் வெப்பநிலையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது பெரியவர்களில் நீரேற்றம் மற்றும் உடல் வெப்பநிலை, அதே போல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் மத்திய நரம்பு மண்டலம் (தூக்கம், பதட்டம், நடத்தை மாற்றங்கள்) மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் பிறப்பு எடை தொடர்பான பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்று ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அறிவியல் சான்றுகளை மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவிக்கின்றது.
முட்டைக்கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களில் இருந்து பூச்சிகளைத் தடுக்க இந்த ஊக்கியைப் பயன்படுத்த அனுமதி கோரி பிரெஞ்சு நிறுவனமான புரோகரீன் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.