இலங்கையில் அதிகாலையில் கோர விபத்து – நால்வர் பலி – 28 பேர் படுகாயம்
குருணாகலை, தோரய பகுதியில் இன்று அதிகாலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்தில் 28 பேர் காயமடைந்து குருநாகல் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கதுருவெலவிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தோராய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 90 times, 1 visits today)





