செய்தி விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இதனால் 165 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் குனமன் 5, லயன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், 489 ரன்கள் பின்தங்கியதால் இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பாலோ ஆன் வழங்கியது. இதனால் மீண்டும் 2வது இன்னிங்சில் இலங்கை அணி களமிறங்கியது.

6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. இதனையடுத்து தினேஷ் சண்டிமால் -மேத்யூஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். சண்டிமால் 31 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி 247 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜெஃப்ரி வேண்டர்சே 51 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ந் தேதி தொடங்குகிறது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி