செய்தி விளையாட்டு

INDvsENG – இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ரன்னில் வெளியேறினார்.

இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 78 ரன்களுக்குள் 5 விக்கெட் இழந்து திணறியது.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் திலக் வர்மா அதிரடியாக ஆடின் அரை சதம் கடந்தார். 6வது விக்கெட்டுக்கு திலக் வர்மா-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 38 ரன்கள் சேர்த்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், இந்தியா 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 72 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

(Visited 45 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!