மகாராஷ்டிராவில் 15 வயது சிறுவன் தற்கொலை
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தனது பிறந்தநாளில் 15 வயது சிறுவன் தனது தாய் செல்போன் தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மிராஜ் நகரில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விஸ்வஜீத் ரமேஷ் சம்தன்வாலே தனது தாயும் சகோதரியும் உறங்கிக் கொண்டிருந்த போது தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு விஸ்வஜீத் தனது பிறந்தநாளைக் கொண்டாடியதாகவும், தனது தாயிடம் மொபைல் போன் கேட்டதாகவும் அதிகாரி தெரிவித்தார். சில நிதிப் பிரச்சனைகளால் அம்மா கோரிக்கையை மறுத்தார்.
மறுநாள் சிறுவனின் குடும்பத்தினர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர்.
விபத்து இறப்பு அறிக்கை (ADR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி குறிப்பிட்டார்.
(Visited 33 times, 1 visits today)





