ரஷ்யாவில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து!
மேற்கு ரஷ்ய நகரமான ஓரியோலில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் பாரிய தீவிபத்து நேர்ந்துள்ளது.
உக்ரைன் மேற்கொண்ட விமான தாக்குதலில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய டெலிகிராம் சேனல்கள் மற்றும் உள்ளூர்வாசிகளால் பகிரப்பட்ட வீடியோக்கள், உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்குப் பிறகு வெடிப்புகள் அந்தப் பகுதியை உலுக்கியதாகக் கூறுகின்றன.
Oryol Oblast இன் ஆளுநர் Andrey Klychkov, பிராந்தியத்தின் மீது 11 ட்ரோன்கள் இடைமறித்ததாக தெரிவித்துள்ளார்.





