ஐரோப்பா

ரஷ்யாவில் அதிகரித்துள்ள ஊழல் மோசடி : 30 ஆயிரம் பேருக்கு எதிராக நடவடிக்கை!

ரஷ்யாவில் போரின் காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஒரே ஆண்டில்  30000 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறியதற்காக கிட்டத்தட்ட 30,000 அதிகாரிகள் பிடிபட்டுள்ளனர் என புடினின் வழக்கறிஞர் ஜெனரல் இகோர் கிராஸ்னோவ் தெரிவித்துள்ளார்.

அவர் ரஷ்ய அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மொத்தத்தில் 500 பேர் நம்பிக்கை இழந்தமையால் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்குகளில் பாதி லஞ்சம் சம்பந்தப்பட்டதாக தெரிவித்த அவர் கடந்த 06 மாதங்களில் 200 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!