இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

சுவிட்ஸர்லாந்தில் விருந்தில் ஏற்பட்ட விபரீதம் – பலர் பாதிப்பு – 17 பேர் மருத்துவமனையில்

சுவிட்ஸர்லாந்தில் 20க்கும் மேற்பட்டோர் கார்பன் மொனொக்ஸைட் (carbon monoxide) நச்சுப்புகையால் பாதிக்கப்பட்டனர்.

மத்திய சுவிட்ஸர்லாந்து முகாம் பகுதியில் நடந்த விருந்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிஸ்வில் (Giswil) என்ற பகுதியில் சம்பவம் நடந்ததாக வட்டார பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முகாமில் கார்பன் மொனொக்ஸைட் அதிகளவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26 பேர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர். அதில் 17 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முதலுதவியாளர்கள், மீட்புப்பணி ஊழியர்களோடு இரண்டு ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content