ஆசியா

இந்தோனிசீயாவில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி !

இந்தோனீசியாவின் வடசுமத்திரா மாநிலத்தை அண்மையில் கனமழை உலுக்கியது.இதன் காரணமாகத் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இதில் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பேரிடர் நிகழ்ந்து நான்கு நாள்கள் கழித்து, மாயமான 7 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.

இத்தகவலை இந்தோனீசிய அதிகாரி ஒருவர் நவம்பர் 26ஆம் திகதியன்று தெரிவித்தார்.

தேடுதல், மீட்புப் பணியில் ஏறத்தாழ நூறு பேருடன் காவல்துறை அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும், இடைவிடா மழை தேடுதல் பணிக்கு இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“தேடுதல் பணி நவம்பர் 30ஆம் திகதி வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் காரணமாக வீடுகள், பள்ளிவாசல்கள், நெல் வயல்கள் ஆகியவை சேதமடைந்தன.கிராமங்களுக்கு இட்டுச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

மாயமானோரைத் தேடும் பணியில் மண்ணைத் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன,

இதற்கிடையே, கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாள்களிலும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வடசுமத்திரா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 40 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!