இலங்கை

மியன்மாரில் சிக்கித் தவித்த முப்பத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

மனித கடத்தலால் பாதிக்கப்பட்டு மியான்மரில் சிக்கித் தவித்த 32 இலங்கை பிரஜைகள் வெற்றிகரமான, ஒருங்கிணைந்த செயல்முறையின் பின்னர் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இலங்கையர்கள் சைபர் கிரைம் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு, மனித கடத்தலுக்கு பலியாகிவிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு அவசர பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!