போரில் புதியவர்களை உள்வாங்க ரஷ்யா போட்டுள்ள திட்டம் : கடன்களை இரத்து செய்வதாக அறிவிப்பு!

உக்ரைனில் சண்டையிடும் ஒவ்வொரு ரஷ்யனுக்கும் 75,000 பவுண்டுகள் கடனைத் இரத்து செய்யும் புதிய சட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உருவாக்கியுள்ளார்.
புதிய சட்டம் ரஷ்ய குடிமக்கள் டிசம்பர் 1 க்குப் பிறகு உக்ரைனில் சண்டையிட ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதிக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களையும் உள்ளடக்கும் எனக் குறிப்பிட்டுள்ள புட்டின் இதற்காக 10 மில்லியன் ரூபிள்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது, போரில் இணைவதற்கு வலுவான ஊக்கத்தை வழங்கும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
(Visited 36 times, 1 visits today)