இலங்கையை உலுக்கிய பல்கலைக்கழக பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) மூன்றாவது மாணவர், நவம்பர் 1 ஆம் திகதி பதுளையில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்,
இதனால் இறப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த 24 வயதான கயிலைநாதன் சிந்துஜன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (23) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன்.
நவம்பர் 1 ஆம் திகதி பதுளை துன்ஹிந்த வீதியில் KDU மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் இரு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 39 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் KDU இன் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளும் அடங்குவர்.
(Visited 13 times, 1 visits today)





