செய்தி

அமெரிக்காவில் முதல் முறையாக குழந்தையை தாக்கிய பறவைக் காய்ச்சல்

அமெரிக்காவில் முதல் முறையாக குழந்தைக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகஅடையாளம் காணப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன.

குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருந்தோருக்கு சோதனை நடத்தச் சுகாதார ஊழியர்கள் முன்வந்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் யாருக்கும் பறவைக் காய்ச்சல் இல்லை என்பது உறுதியானது.

கடந்த 15 ஆண்டில் உலகில் எந்த நாட்டிலும் மனிதர்களுக்கிடையே பறவைக் காய்ச்சல் பதிவாகவில்லை.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!