செய்தி தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணா தலைமையிலான ஒரு நபர் ஆணையம்,வேங்கை வயல் கிராமத்தில் மலம் கலந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு பின்னர் பொதுமக்களை சந்தித்து எந்தவித குறைகளையும் கேட்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றார்.

பொதுமக்களிடம் விசாரணை செய்வதற்காக வேங்கை வயல் அரசு பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி சத்ய நாராயணா பொதுமக்களிடம் எந்தவித விசாரணையும் செய்யாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி வருவாய்த்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகளோடு ஆலோசனை செய்து வருகிறார்.

(Visited 10 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி