இலங்கை

இலங்கை: எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்: வாக்களிக்கும் நடைமுறையில் சிறிய மாற்றம்

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக வாக்காளரின் இடது கையின் கட்டை விரலில் பொருத்தமான அடையாள மை வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக இடது கை சிறு விரலில் அடையாளப்படுத்தப்பட்டது.

எனினும் அந்தக் குறியீடு இன்னும் அந்த விரலில் உள்ளமையினால் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3) ஆம் பிரிவின் பிரகாரம், 26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் போது வாக்காளரின் இடது கைப் பெருவிரலில் அடையாளமிடப்படும்.

வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில், அவரது வலது கையில் உள்ள வேறேதெனுமொரு விரலில் அடையாளமிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)
See also  அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல்கள் - போலந்து கடும் எதிர்ப்பு
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content