இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் கொட்டி தீர்த்த மழை : 1இலட்சத்து 58 ஆயிரம் பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தீவைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இதுவரை 12 மாவட்டங்கள் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 126.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் களனிமுல்ல, கடுவெல உள்ளிட்ட அண்டிய பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அத்தனகலு ஓயா பெருக்கெடுத்து ஓடியதால் கொழும்பு-குருநாகல் பிரதான வீதி ஜாஎல கொட்டுகொட சந்தியில் வெள்ளம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், கம்பஹா நகரில் வெள்ளம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.

களுகங்கை மற்றும் குடுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ்நிலப் பிரதேசங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஹமில்டன் கால்வாய் நிரம்பி வழிவதால் புத்தளம் நாத்தாண்டி, தும்மோதர, மாவில உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

அத்தனகலு ஓயா, களனி, களு மற்றும் ஜிங் ஆற்றுப் படுகைகளின் வெள்ள அபாய நிலை குறைந்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று இரவும் நாளையும் நாட்டின் பல மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை, அபாயகரமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என, கடற்படையினர் மற்றும் மீனவ மக்களுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் மழையினால் அப்பகுதி மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பனிமூட்டமான நிலையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

(Visited 39 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!