இலங்கை

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் போட்டியில் இருந்து விலகும் மற்றுமொரு முன்னாள் அமைச்சர்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக நாடு பல்வேறு பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததாகவும், வங்குரோத்து நிலைக்கு ஆளான பின்னர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடும் பொருளாதாரமும் ஸ்திரமாக இருக்கும் போது அதன் பலன்கள் மக்களுக்கே கிடைக்கும் என்பதால் அதனை மக்கள் புரிந்து கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒரு நாடு என்ற வகையில் மக்கள் செய்த தியாகங்கள் மற்றும் செய்த சாதனைகள் குறித்து மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என தான் நம்புவதாகவும், அதை இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கடந்த அரசாங்கம் பெரும் முயற்சியுடன் கட்டியெழுப்பிய கொள்கை ரீதியான அரசியல் பாதையை மக்கள் நிராகரித்தமையால் ஏமாற்றமடைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!